07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, November 1, 2008

இவனும் என் தோழன்


மழை பெய்ந்து ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில் கழுவி விடப்பட்ட சாலைகளில் இருபுறமும் சூழ்ந்த மரங்கள் தரும் சிறு குளிரில் மனதுக்குப் பிடித்த மனைவியோ,தோழியோ, நண்பனோ, நண்பியோ அல்லது வேறு யாரோடோ அரைட்டை அடித்தபடி செல்லும் சுகத்தை உணர்ந்து இருக்கின்றீர்களா?

எனக்கு அப்படி உனர்வைத் தரும் சகோதரர் பாபு அண்ணனின் பதிவுகளைப் படிக்கும் போதெல்லாம். எடுத்துக் கொண்ட விஷயங்களில் கணம் இருக்காது, வார்த்தைகளில் அலங்காரம் இருக்காது, எந்த இடத்திலும் அகம்பாவமும் இருக்காது. கதை, கவிதை என்றெல்லாம் மிரட்ட மாட்டார். சுற்றி நடப்பவற்றை உற்று நோக்கியோ, சுற்றி நடப்பவற்றில் உருத்துபவை பற்றியோ எழுதுவார். நான் அவருக்கு விடாமல் பின்னூட்டம் போடும் தோஷத்தாலோ என்னவோ அவ்வப்போது மைல்டாக மொக்கை போடுவார்.



தன்னுடைய பேருந்து பயண அனுவங்களைப் பற்றி இந்த பதிவில் சொல்லி இருப்பார்....பாருங்கள்.அதுபோல அந்த நாள் ஞாபகம் என்று ஒரு அருமையான பதிவு. எதார்த்தத்தை விரும்பும் எவரும் இவரை இரசிப்பார்கள்.

பாபு அண்ணனுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். என் மாப்பிள்ளை பொடியன் சஞ்சையைப் பார்த்து கெட்டுப் போய்விடாமல் இப்படியே அழகாக எழுதுங்கள்

டிஸ்கி 1 : யோவ் சஞ்சய் வலைச்சரத்துல உன்னையப் பத்தி எழுதலன்னு கோவுச்சுக்கிட்டியே...இப்போ உன் பெயரையும் போட்டாச்சு போதுமா??


டிஸ்கி 2 : பொதுவாக அனைவரையும் அண்ணே என்று அன்போடு அழைக்கும் பழக்கமுடைய நான் மாப்பிள்ளை என்று மகிழ்வோடு அழைப்பது சஞ்சையை மட்டுமே :)

25 comments:

  1. ஒரு நல்ல பதிவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி, இப்போதுதான் பாபு அண்ணண் குறித்து அறிகிறேன்.

    ReplyDelete
  2. இதுவரை பாபுவை படித்ததில்லை.. நல்ல அறிமுகம்.. ரீடரில் சேர்த்தாச்சி.. நன்றி அப்துல்லா..

    ReplyDelete
  3. ஒரு நல்ல பதிவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணே!

    ReplyDelete
  4. பாபுவின் பதிவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  5. wow..i just posted a similar post in mine..about my friend...

    ReplyDelete
  6. நல்ல அறிமுகம்..!

    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. //பாபு அண்ணனுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். என் மாப்பிள்ளை பொடியன் சஞ்சையைப் பார்த்து கெட்டுப் போய்விடாமல் இப்படியே அழகாக எழுதுங்கள்//

    யோவ் மாமா... இத யோசிக்கத் தான் ஹைதராபாத்ல 3 நாள் தூங்காம உக்காந்து யோசிச்சிங்களா?

    ஒரு நல்ல பதிவரை அறிமுகப் படுத்தியதால சும்மா விடறேன்.. இல்லைனா.. அப்போவும் சும்மா தான் விடுவேன்.. ஜாக்கிரதை.. :))

    ReplyDelete
  8. கதை, கவிதை என்றெல்லாம் மிரட்ட மாட்டார்.// என்னை ம‌ன‌சில் வெச்சு சொன்னா மாதிரியே இருக்குதே.. அவ்வ்வ்..

    ReplyDelete
  9. பாபு உண்மையிலேயே ரொம்ப நல்லவருண்ணே.. நானே அவரு பத்தி எழுதுணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க.. (நா அவ்ரு பதிவுக்கு ஆடிக்கொருநாள் போனாலும் தவறாம என் பதிவுக்கு வந்துடுவாருண்ணே..)

    ReplyDelete
  10. இதுவரை பாபுவை படித்ததில்லை.. அறிமுகத்துக்கு நன்றி அப்துல்லா அண்ணே

    ReplyDelete
  11. //பாபு அண்ணனுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். என் மாப்பிள்ளை பொடியன் சஞ்சையைப் பார்த்து கெட்டுப் போய்விடாமல் இப்படியே அழகாக எழுதுங்கள்//

    ரிப்ப்ப்ப்பீட்டு

    ReplyDelete
  12. வாங்க ஜோசப் அன்னே நீங்கதான் முதல்ல :))

    ReplyDelete
  13. வாங்க வெண்பூ

    நன்றி வருகைக்கு

    ReplyDelete
  14. வாங்க தமிழ் அண்ணே

    வருகைக்கு நன்றி :)

    ReplyDelete
  15. வாங்க சின்ன அம்மினி

    எப்படி இருக்கு ஆஸ்திரேலியா???

    ReplyDelete
  16. வாங்க பவனிதா

    நானும் உங்க வலைப்பூவில் பார்த்து ஆச்சர்யப்பட்டேன் :)

    ReplyDelete
  17. வாங்க சுரேகா அண்ணே

    வருகைக்கு நன்றின்ணே

    ReplyDelete
  18. வாங்க சஞ்சய் மாப்ள

    //இல்லைனா.. அப்போவும் சும்மா தான் விடுவேன்.. ஜாக்கிரதை.. :))

    //

    சரி சரி சீக்கிரம் கல்யாணம் பண்ன வேண்டியதுதான் உனக்கு. பொண்டாட்டிட்ட பேசுற டயலாகெல்லாம் வந்துருச்சு :))

    ReplyDelete
  19. வாங்க தாமிரா அண்ணே

    அடடே...டக்குனு புருஞ்சுருச்சே உங்களுக்கு :)

    ReplyDelete
  20. வாங்க இவன் அண்ணே

    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  21. வாங்க மங்களூர் சிவாண்ணே

    போட்டாச்சா வழக்கம்போல ரிப்பீட்ட...போய்ட்டு வாங்க :)

    ReplyDelete
  22. பெரிய பெரிய ஆளையெல்லாம் நம்ம பக்கம் திரும்பி பார்க்க வைத்ததற்கு நன்றி
    அதுவும் அந்த ஆரம்ப வார்த்தைகள், அடடா அருமை.
    அந்த வார்த்தைகளுக்கு தகுதியானவன்தானா என்று தெரியவில்லை,உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.
    சுரேகா,தாமிரா மற்றும் வெண்பூ பதிவுகளுக்கு நான் தொடர்ந்து போவதுண்டு

    ReplyDelete
  23. //மழை பெய்ந்து ஓய்ந்த ஒரு மாலைப் பொழுதில் கழுவி விடப்பட்ட சாலைகளில் இருபுறமும் சூழ்ந்த மரங்கள் தரும் சிறு குளிரில்//

    வர வர நீங்க எத எழுதினாலும் கவிதை மாதிரி இருக்கு

    ReplyDelete
  24. அவரு சஞ்சய் ராமசாமி
    இவரு சஞ்சய் சரக்குசாமி

    ஆனா எந்த கெட்ட பழக்கமும் இல்லைன்னு உண்மையை சொல்லுவாரு

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது