07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 5, 2008

கவிதை - 1

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மாயவித்தைதான் கவிதை. நேரிடையாக ஒன்றையும், அதுகாட்டும் குறியீடு, படிமங்களின் வாயிலாக இன்னொன்றையும் வெளியிடுகிற சாத்தியம் கவிதைக்கு மாத்திரமே சாத்தியம். இது மொழியின் பலவீனமும் கூட. மொழியின் மூக்கணாங்கயிறை சுண்ட இழுத்து, சொற்களை பலவீனமாக்கியோ இல்லை பலமாக்கியோ புனையப்படும் எழுத்துக்கு கவர்ச்சியும் வெறுப்பும் அதிகம். அந்த வெற்றுப்பையும் கவர்ச்சியையும் கவிதை என்றும் சொல்லலாம்.

வாழ்வின் குத்தாட்ட குஸ்திகளில், சந்திக்க நேர்கிற அனுபவங்களை, அந்த நொடி ஏற்படுத்தும் சிலிர்ப்பையும் உணர்வையும் வார்த்தைக்குள், சிந்தனா பூர்வமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் அடக்க முடிந்தால் அந்தக் கவிதைக்கு ஆயுள் ஜாஸ்தி.

இன்றைக்கு புதிதாக கவிதை எழுதிவருபவர்கள், அதன் வரலாறை, முன்னோடிகளை அறிந்துகொள்வது அவசியம். புதுகவிதையின் வரலாறை, ஏற்கனவே கவிஞர் பாலா, வல்லிக்கண்ணன், ராஜமார்த்தாண்டன் ஆகி்யோர் எழுதியிருந்தாலும், நடைவழிக் குறிப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இக்கட்டுரை அறியவேண்டியது.

சுந்தரின் மொழிவிளையாட்டில் காய்த்து தொங்குகிறது கவிதைகள். அவரது கவிதைகள் நகரம் சார்ந்தவை. நகரத்தின் சந்துபொந்துகள் பிதுக்கிப் போடும் வேதனைகளில்/சுகங்களில் அவர் வாழ்வி்ன் இயக்கம் துடிதுடிக்கிறது. அவ்வாறு துடிக்கின்ற ஒரு மெல்லிய உணர்வின் கனத்த காயத்தை தந்து போகிறார்கள் அவரி்ன்அக்காவும் நானும் . இவர் ஆரம்பித்திருக்கிற அ கவிதைகள் சுகமான மொழி விளையாட்டு.

எதையாவது வெளிப்படுத்தவே விரும்புகிறது எல்லா கவிதைகளும். அந்த வெளிப்படுத்தலுக்கு கவனிப்புகள் முக்கியம். எங்கோ ஒரு புள்ளியை பார்த்தால், அதை கோடாக்கலாம். கோலமாக்கலாம். ஆனால் கட்டுப்பாட்டுக்குள் சிக்காமல் தனித்து இயங்கும் அல்லது தப்பி நிற்கும் புள்ளிகள் நம்மை ஏளனமாகப் பார்க்கின்றன. எதற்காகவோ சிரிக்கின்றன. பரபரத்து திரியும் வாழ்க்கையில் மனதுக்குள் முரண்டுபட்டு நிற்கும் அந்த புள்ளிகளின் எண்ணிக்கை ஏராளம். புள்ளி என்பது ஒரு நேர்க்கோட்டின் துண்டு. அதை நெற்றியில் வைத்தால் பொட்டு. வானில் வைத்தால் சூரியன். காயத்ரியின் பாலைத்திணைக்காட்டும் புள்ளியில், உறுத்திக்கொண்டிருக்கும் புள்ளியின் வீச்சில் நான் இதைத்தான் பார்க்கிறேன்.

கவிதை இதைத்தான் கொண்டிருக்க வேண்டும் என்கிற கட்டுப்பாட்டை கடந்தது. அது ஐந்து சொற்களில் அண்டத்தை அடைகாத்துவிடும் சகதி பெற்றது. அய்யனாரின் தனிமையின் இசையில், நிராகரிப்பின் வலிகள் நிறைந்த கவிதைகள் அதிகம். அவரது வார்த்தைகள் கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கின்ற வாசகத் தோழமை கொண்டவை. வார்த்தையாகக் கட்டப்பட்டிருக்கிற இவரது எழுத்தின் மேல் வாழ்க்கையின் சிக்கல் மிகுந்த நுட்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.
பாதுகாப்புகளற்ற வெளியில் இயங்குகிறது சகலமும்
என்கிற கவிதையில் வருகிற கருப்பு தேசத்து குழந்தை, அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானத்தை நினைவுபடுத்தி போகிறது.

ஒவ்வொரு நிமிடமும் யுத்தம்தான். பஸ் பயணத்தில், அலுவலக அரசியலில், ரேஷன் கடை கியூவில்... இன்னும் வாழ்க்கையின் ஒவ்வொரு துடிப்பிலும் சந்திக்கின்ற யுத்தங்கள், சங்ககால போருக்கு கொஞ்சமும் குறைவில்லாதது. முபாரக் எழுதியிருக்கும் இன்றிரவின் யுத்தம் பிழைப்புக்காக நகரம் சார்ந்து, அதன் கொடும் கரங்களில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் அனைவருக்குமான யுத்தமாகிறது. மிகுந்த சொற்சிக்கனத்தோடும் செறிவோடும் எழுதப்பட்டிருக்கிற கவிதை இது.

'மொழிபெயர்க்க முடியாதது எதுவோ கவிதை' என்கிற மேற்கோளை எங்கோ படித்திருக்கிறேன். இப்படியான கவிதையை, மண் சார்ந்து அந்த மண்ணின் மொழியிலேயே எழுதினால் மட்டுமே சாத்தியம். 'ஏலே...' என்கிற பதம் இன்னொரு மொழியில் எப்படி மொழிபெயர்க்கப்படும் என்று தெரியவில்லை. இதே போன்ற மண்ணின் மொழி ஏராளமாக இருக்கிறது. அந்த வட்டார வழக்கு நடைகளுக்கு, வலைப்பதிவில் பஞ்சம் இருப்பதாகவே நினைக்கிறேன்.

4 comments:

  1. உங்கள் கட்டுரை நடை நன்றாக உள்ளது. வாழ்த்துகள் ஆடுமாடு.

    நிறைய கட்டுரைகளும் எழுதுங்கள்

    ReplyDelete
  2. நன்றி சுந்தர்ஜி

    ReplyDelete
  3. அக்கறையான விமரிசனம் செய்வதில் நீங்கள் அயர்வதே இல்லை சீனா

    ReplyDelete
  4. ஐயா புகாரி நன்றி.

    நண்பர் சீனா போனவாரம்தான் ஆசிரியர். இப்ப ஆடுமாடுங்க.

    ஆங்...ங்..ங்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது