07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, October 16, 2008

தமிழ்வலையில் நகைசுவை பதிவர்கள்!

மனிதனை மற்ற விலங்குகளிடமிருந்து பிரித்து காட்ட நாம் பயன்படுத்தும் வார்த்தை சிரிப்பு, சிரிப்பு என்பது சந்தோசத்தின் வெளிப்பாடு, எல்லோரும் வாழ விரும்புவது அப்படியே.

தமிழ் வலைப்பூவை பொறுத்தவரை நிறைய பேர் நகைச்சுவையை கையாளுகிறார்கள்.
சிலரது குபீர் சிரிப்பு, சிலருடையது சிந்தனை சிரிப்பு, சிலரது பயங்கர மொக்கைகளாக இருந்தாலும் ஒரு சிறு புன்னகையாவது நம்மில் கொணராமல் அது போவதில்லை,
இங்கே நான் ரசிக்கும் நகைசுவை பதிவர்களை உங்களுக்கு அடையாள படுத்துகிறேன்.

குசும்பன்!

இவர் ஒரு பதிவு போட்டாலே, இனிப்பை கண்ட குழந்தை போல் ஆகிவிடுவேன். நான் அறிந்த பலருக்கும் இதே அனுபவம் தானாம். வெரைட்டி மீல்ஸ் போல வெரைட்டியாக குசும்பு பண்ணவது இவரது கலை, இவைகள் என்று குறிப்பிட்டு சொல்வதர்கில்லாமல், ஓரிரு சீரியஸ் பதிவுகளை தவிர மற்ற அனைத்துமே உங்களை கவரும். இவரது கார்டூன்கள் குசும்பின் உச்சகட்டம். பின்னூட்டங்களிலும் குசும்பை வெளிப்படுத்துவது பதிவர்களுக்கு ஊக்கம் தரும். சமகால பதிவர்களில் குசும்பன் மிக முக்கியமானவர்

லக்கிலுக்

இவருடைய எதிர்பதிவுகள் உலகபிரசித்தம், இவர் உருவாகிய கதாப்பாத்திரங்களான காண்டு கஜேந்திரன், பாரு நிவேதிதா நிஜத்தில் வாழ்வது போன்றே அவரது எழுத்தில் தெரியும். எவ்வளவு பெரிய சீரியஸ் மேட்டரயையும் நகைச்சுவையாக்கி எழுதியவரையே சிரிக்க வைப்பது இவரது யுக்தி. இவரது பதிவுகளில் லேபில் இல்லை என்பதால் அதற்கு மட்டும் தனியாக சுட்டி கொடுக்க முடியவில்லை.

ச்சின்னப்பையன்

மிக குறிகிய காலத்தில் நிறைய நண்பர்களை அடைந்தவர்களில் இவரும் ஒருவர்.
இவருடைய தனித்தன்மை "இன்னார் மென்பொருளாலரானால்" என்று பலரையும் கலாய்ப்பது ரசிக்கதக்கவாறு இருக்கும். இவருக்கு நண்பர்கள் மத்தியில் மொக்கை மன்னன் என்ற பட்டம் இருந்தாலும் இவருடைய மொக்கைக்கு யாரும் ஈடுடில்லை என்பதால் இவரை மொக்கை மாமன்னர் என்றே அழைக்கலாம்.


அதிஷா

இவரும் குறுகிய காலத்தில் நிறைய நண்பர்களை அடைந்தவர்.
ஆரம்பத்தில் கொஞ்சம் சீரியசாகவே எழுதினாலும் தற்பொழுதெல்லாம் வெறும் நகைச்சுவைக்கே முக்கியத்துவம் தருகிறார். லக்கிலுக்கின் பாணியில் காதாபாத்திரங்களின் பெயரை மாற்றி கலாய்ப்பது லக்கியையே தூக்கி சாப்பிடம் அளவுக்கு நகைச்சுவையாக இருக்கிறது. பின்ன லக்கியின் தயாரிப்பல்லவா அதிஷா.

ஆசிப் அண்ணாச்சி!

இவரை நகைச்சுவை பதிவர் என்று சொன்னால் யாராவது கோபப்பட போகிறார்கள்.
சில நேரங்களில் பயங்கர சீரியஸ் மேட்டரும். மனம் நெகிழக்கூடிய விசயங்களும் எழுதுவார். குறிப்பிட்டு அய்யனாருக்கு எதிர்பதிவு எழுதி கலாய்ப்பது மிகவும் ரசிக்கதக்கவாறு இருக்கும். வட்டார மொழி நடையில் இவர் எழுதும் பதிவுகள் எல்லாமே நகைச்சுவை தான் எனக்கு. படிக்காதவர்கள் படியுங்கள் உங்களுக்கே தெரியும்.

ராப் என்னும் வெட்டிஆபிசர்,

எல்லா பதிவர்கள் பின்னூட்டத்திலும் me the first போடுவது இவரது பழக்கம். அதாவது இவரை தெரியாதவர்கள் எவரும் இல்லை. சுய எள்ளல் இவரிடம் தண்ணி பட்ட பாடு. மற்றவர்களை கலாய்ப்பதை விட நம்மை நாமே கலாய்த்து கொள்ளலாம் என்று நினைத்து விட்டார் போல. நல்ல நகைச்சுவையுடன் எழுதுகிறார். இவருடைய இந்த பதிவு ஒரு சான்றுக்கு மட்டுமே

25 comments:

  1. ஆசிரியர் குட் ஈவ்னிங்

    ReplyDelete
  2. எதோ ஒதைக்குதே?

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. I Like "Abi Appa". He is the one who writes most of his experice in very "lollu with and laughter" manner. Just read about "kalakkare chandru"

    ReplyDelete
  5. அபிஅப்பா, இம்சையரசியெல்லாம் எங்க?

    ReplyDelete
  6. //
    "தமிழ்வலையில் நகைசுவை பதிவர்கள்!"
    //

    ஓ சிரிப்பு போலிஸா????

    ReplyDelete
  7. //
    கும்க்கி said...

    எதோ ஒதைக்குதே?
    //
    பதிவோட தலைப்புதான்!

    ReplyDelete
  8. நம்ம பதிவெல்லாம் கூட நகைச்சுவைதான் யாரு சீரியஸ் ஆக எடுத்துக்கிறாங்க?

    ReplyDelete
  9. ஹா ஹா ஹா.. எல்லாம் கலக்கல் பார்ட்டிகள்ப்பா.... நன்றி!

    ReplyDelete
  10. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வால்!!!

    ReplyDelete
  11. ஐயா இத்தனை பெரிய பதிவர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்து பெருமைப்படுத்திய உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை..

    இத்தனை பதிவர்கள் இருந்தாலும் வால்பையனை விஞ்சிய நகைச்சுவை பதிவர் உண்டா...

    ReplyDelete
  12. நல்ல நகைச்சுவை பதிவு

    ReplyDelete
  13. அபி அப்பா எங்கே ??????

    ReplyDelete
  14. டோண்டு சாரை விட்டுவிட்டாயே ??? ஹெ ஹெ

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. எங்கள் தலை வால்பையனை பற்றி எழுதாததை கண்டிக்கிறோம்..

    ReplyDelete
  18. நல்ல அறிமுகம் தல..

    நர்சிம்

    ReplyDelete
  19. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி வால்பையன்

    ReplyDelete
  20. நல்ல பதிவு.

    நான் நகைச்சுவை பதிவரா?

    சீரியசான பதிவரா?

    ReplyDelete
  21. நன்றி கார்க்கி

    நன்றி பரிசல்

    நன்றி கும்கி
    நான் யாரையும் உதைக்கலையே

    நன்றி மாப்புள
    உண்மைதான். அவரை விட்டதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்,
    அவரும் அருமையான நகைச்சுவை எழுத்தாளர்

    நன்றி அப்துல்லா
    மாப்பு கேட்டுக்குறேன்

    நன்றி சிவா

    நன்றி கூடுதுறை
    உங்க பதிவு படிச்சா எனக்கு சிரிப்பு வருது
    உண்மையிலேயே, அப்போ நகைச்சுவை தானே

    நன்றி தமிழ்பிரியன்

    நன்றி ச்சின்னப்பையன்
    எதை சுட்டுனத்தை சொல்றிங்க
    மொக்கை மாமன்னரையா

    நன்றி அதிஷா
    நான் எழுதி நானே தான் சிரிச்சுகனும்
    என்னோடதெல்லாம் நகைச்சுவையா

    ReplyDelete
  22. நன்றி இளா!
    சங்கத்து சிங்கங்கள் இங்கே வந்துருச்சே

    நன்றி குடுகுடுப்பை
    என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே

    நன்றி செந்தழல் ரவி
    தப்பு தான், மன்னிச்சுகோங்க

    நன்றி நான் மட்டும்
    நீங்களுமா

    நன்றி தமிழ்நெஞ்சம்

    நன்றி நர்சிம்
    உங்களுக்கு ஜ்யோவ்ராம் சுந்தர் கொடுத்துருக்கார் பாருங்க

    நன்றி ராப்
    வருத்தேமேல்லாம் இங்கே me the first இல்லையே

    நன்றி நொந்தகுமாரன்
    நீங்களும் நகைச்சுவை பதிவர் தான்

    நன்றி விக்னேஸ்வரன்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது