07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 15, 2008

மயிலாடுதுறை - ஊர்க்காரங்க சொல்றாங்க!!


வலைச்சரத்தில் ஊர்ப்பெருமை பேசாம விட்டா நல்லாவா இருக்கும்னு மனசுக்குள்ள கேள்வி எழவே இல்லை! ஏன்னா..! ஏற்கனவே தீர்மானமா முடிவு பண்ணுன விஷயம்தானே!

எங்க ஊர்க்கார பதிவர்கள் எல்லாருமே ஊரைப்பத்தி சொல்லியிருக்கும்போது வுட்டுட முடியும்ங்களா!


பிறந்தக பெருமை எனக்கு ஊரைப்பத்தின நினைப்பு வரும்போதெல்லாம் இந்த பதிவுகளுக்குள் முழ்கிவிடுவேன் ஏன்னா இவரு போன பாதைகளிலே நானும் பயணித்திருக்கிறேன்ல

எங்கள் கிராமமாகிய நல்லத்துக்குடி, மாயவரம் டவுன் ஸ்டேஷனில் இருந்து, அதாவது மயிலாடுதுறையின் சர்வதேச வரைபட எல்லைக்கோட்டில் இருந்து 'கொஞ்சூண்டு' உட்பட்ட இடம். கொஞ்சூண்டு என்றால் நிஜமாகவே கொஞ்சூண்டு தான். கால் மைலுக்கும் குறைவு. ஒரு அரைக்கால் மைல் இருக்கலாம். ஆனால், பனிக்கட்டி படர் இந்திய சியாச்சேன் மலை-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனிய எல்லைக்கோடுகளை விட இது அதி முக்கியத்துவம் வாய்ந்த சென்சிடிவ்வான இடம்.(இன்னும் கொஞ்ச தூரம் போன எங்க வீடு வந்துடும் தெரியுமா?)

பாகம் ஒண்ணு
பாகம் ரெண்டு
பாகம் மூணு
பாகம் நாலு
பாகம் அஞ்சு
பாகம் ஆறு!

۞۞۞۞۞

ஊருல இருக்கற தியேட்டரை பத்தின பதிவு இது புது புது படம் பார்க்கறதுக்கு அடிச்சு புடிச்சு போய் நின்ன ஞாபகங்கள் வருது! மயிலாடுதுறை வாழ் பெருமக்களுக்கு (முக்கியமாக சினிமாவில் ஆர்வமில்லாதவர்களுக்கும்) பியர்லஸ் தியேட்டரை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. சினிமா ரசிகர்களுக்கோ இது சினிமா பேலஸ்!

ரீலிஸான நாளன்று பாலம் முழுவதும் கூட்டத்தால் நிறைந்திருக்கும். வெயிலானாலும் மழையானாலும் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.

۞۞۞۞۞

எங்க ஊருல வார விடுமுறையை கொண்டாடணும்னா இங்க தான் நாங்க வருவோம் உசரத்தில போய் உக்காந்துக்கிட்டு சைக்கிளை திரும்ப மிதிக்காமலே சர்ருன்னு வர்றது இப்படியெல்லாம் செய்யலாம் இந்த இடததுல் எந்த இடம்ன்னு இவுங்க சொல்லியிருக்காங்க போய் பாருங்க!

மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த

கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்..

۞۞۞۞۞

இதே மேம்பாலம்தான் ஆனா இவுருக்கு கொஞ்சம் அதி(டி)க அனுபவம் அதான் படமெல்லாம் கூட போட்டிருக்காரு!

அப்போது ஏழாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து சைக்கிளை மிதிக்காமல் உருட்டிக்கொண்டே ஓட்டிவந்தால் காவேரி நகர் பஸ் ஸ்டாப் வரை போய்விட முடியுமா என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசை. ரோட்டோரமாய் நின்று கொண்டிருக்கும் லாரி சரக்கு போர்ட்டர்கள் எதிர்பார்த்த மாதிரியே எதிரே வந்த லாரிக்காரன் மீது சைக்கிளை மோதியதால் வாழ்க்கையில்...

۞۞۞۞۞

எங்க ஊரு பெரிய கோவிலை பத்தி ரொம்ப விரிவா அதேசமயத்தில ரொம்ப பொறுமையா,எல்லாரையும் கூட்டிக்கிட்டு போய் காமிக்கிறாரு அபி அப்பா இங்க இன்னும் அம்மன் கோவில் பாக்கி இருக்கு! அதுக்கு அப்புறமா கூட்டிக்கிட்டு போவாரு!

۞۞۞۞۞

மயிலாடுதுறையில இருக்குற நாலு கோவில்களில் இதுவும் ஒண்ணு

புனுகீஸ்வரர் கோயில்.. சின்ன வயசில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் கோயிலில் தான் சாயங்காலப்பொழுதுகள். வியாழன் தட்சிணாமூர்த்திக்கு ..அபிசேகத்திலிருந்து ஒருகை சுண்டல் வரை என்று ஆரம்பிக்கும் , வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் துர்க்கைக்கு விளக்கு .. சனிக்கிழமை சனிபகவான் அர்ச்சனை, எள்ளுசாதம் ஒரு பிடி..
ஞாயிற்றுக்கிழமை வாரவழிபாடு.. அம்மா அப்பா போகும் இடமெல்லாம் நாங்களும்..

۞۞۞۞۞

எஙக ஊருக்காரரோட ஊர்ப்பயண அனுபவம்
இந்த வருடம் மயிலாடுதுறையில் குடியரசு தின விழாவில் பள்ளிக்குக் கொடியேற்றி, சிறப்புரையாற்றச் சென்றிருந்த போது.. குழந்தைகளுக்குப் பரிசு வழங்க வேண்டியிருந்தது.. அப்பொழுது தன் மகளின் ஆட்டத்தைக் காண வந்திருந்த ஒரு (ஏழை உழைப்பாளி) தந்தையை மேடைக்கு அழைத்து அவரையும் சில பரிசுகளை அவர் கையால் வழங்க வைத்தது...

۞۞۞۞۞

இன்னிக்கு வரைக்கும் முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் எங்க மாயவரத்துகாரரு! அனுபவம்!

ஒன்பதாம் வகுப்பில், முதல் தமிழ் மாதத்தேர்வு. நாங்கள் 5 பேர் கூட்டுத்தேர்வு (இதை ஆங்கிலத்தில் காப்பி அடிப்பது என்கிறார்கள்) எழுதியதில் எனக்கு மட்டும் கூட்டணியில் மட்டுமல்ல வகுப்பிலேயே முதன் மதிப்பெண் வந்தபோது கூட்டணி கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆச்சர்யம்தான்... கூட்டணி தர்மத்தை மீறி உள்குத்தாக நான்கு பதில்கள் அதிகம் எழுதிவிட்டேனோ என்று சந்தேகத்தில் மார்க் ஆராய்ச்சி மேற்கொண்டதில் தமிழாசிரியர் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைக்கு எல்லாம் கால் அரை மதிப்பெண்கள் குறைக்கிறார் என்பது அறிய வந்தபோது நான் கையறு நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு காலத்தில் எழுத்துப்பிழை இல்லாமல் மட்டுமல்ல, குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் முதற்கொண்டு இலக்கண ரீதியாகவும் இயல்பிலேயே சரியாக எழுத வாய்த்திருந்தது என்பதை நினைத்தால் இப்பொழுது பெருமூச்சுதான் விடமுடிகிறது.


۞۞۞۞۞

இதுவும் எங்க ஊரு மூக்கு அண்ணே!

அடிக்கடி போய் வந்தாலும் அலுக்காதது மாயவரம் மாயூரநாத ஸ்வாமி கோயில்தான். வருடம் முழுமைக்கும் ஏதாவது நடந்து கொண்டிருந்தாலும், ஐப்பசி மாதம் முழுக்க திருவிழாக் கோலம் பூண்டுவிடும் கோயில் அது. ஐப்பசி மாதம் முதலாம் தேதி கோயிலில் கொடி ஏறியதுமே, லேசாக மழை தூறி விடும். அன்று தொடங்கி, ஐப்பசி 30, கடைமுழுக்கு வரை, கோயில் புறப்பட்டு, ச்ந்நித்த் தெரு, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக, எங்கள் தெருவான மேலவீதி வந்து, பிறகு பட்டமங்கலத் தெரு வழியாக நேராக லாகடம்

۞۞۞۞۞

மாயவரத்துக்காரரு! இவரோட ஸ்கூல் படிப்பு + அப்படியே சினிமாவுக்கு போன செய்தி இது

'இலங்கைப்பிரச்னை'க்காக பள்ளிக் கூடங்களில் ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்த காலகட்டம். நேஷனல் ஹைஸ்கூலில் ரோட்டுப்பக்க ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். பத்தரை மணி சுமாருக்கு ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முடித்த மற்ற பள்ளிக்கூட மாணவர்கள் ஒன்றாக திரண்டு எங்கள் ஸ்கூல் பக்கம் வரும் இரைச்சல் கேட்கும். மனசு உற்சாகத்தில் கரை புரள ஆரம்பிக்கும். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்டிரைக் காரணமாக ஸ்கூல் லீவு விட்ட 'பெல்' சப்தம் எழும். நாங்கள் சுமார் இருபது பேர் திடுதிடுவென விஜயா தியேட்டருக்கு ஓடுவோம்

۞۞۞۞۞

இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!

இன்னும் கூட நிறைய பேர் தமிழ் பதிவுலகத்தில் இருக்காங்க அவங்களும் சரி இவுங்களும் சரி இன்னும் நிறைய பதிவுகளை எழுதணும்ன்னு ஒரு கோரிக்கை வைச்சுக்கிறேன்ப்பா!

5 comments:

  1. உங்க ஊருக்கு நானும் ரீஜண்ட்டா போய்ட்டு வந்துட்டேன்பா குசும்பன் புண்ணியத்துல

    ReplyDelete
  2. மயிலாடுதுறையில இத்தனை பதிவர்களா? :-))

    ReplyDelete
  3. //.:: மை ஃபிரண்ட் ::. said...
    மயிலாடுதுறையில இத்தனை பதிவர்களா? :-))
    //

    அதுக்கு 22 கிமீ பக்கத்து ஊர்ல கூட ஒருத்தர் இருக்கறதா கேள்விப்பட்டிருக்கேன்.

    ReplyDelete
  4. என்னது அனு! இப்படி கேட்டுட்டே! நாங்க பலபேர்! எல்லே ராம், முகமூடி, மயிலாடுதுறை சிவா, பெருந்தோட்டம் மதி, மாயவரத்தான், ரஜினி ராம்கி, சீமாச்சு அண்ணா, அபிஅப்பாவாகிய நான், ஆயில்யன், சென்ஷி, குசும்பன், முத்துலெஷ்மி, இன்னும் சில பெண்பதிவர்கள் ஆஹ 15 பேருக்கு மேல இருக்கோம்!!

    இப்படிக்கு

    அபிஅப்பா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது