07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 18, 2013

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

கிட்டதட்ட எழுபது வருடங்களாக தமிழக வெகுஜன ஊடக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான பெரும்படைப்பாக திகழ்கிறது பொன்னியின் செல்வன். யாகூ குரூப்கள் இணையத்தில் பாப்புலராக இருந்த போது சில இளைஞர்கள் அதில் ஒரு குரூப்பாக கூடி பொன்னியின் செல்வன் பற்றி விவாதித்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள், கமலகண்ணன், ராமசந்திரன், லாவண்யா, கோகுல் மற்றும் க்ருபாசங்கர் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள ஊர்களுக்குச் சுற்றுபயணம் மேற்கொள்வதென முடிவு செய்தார்கள். அப்படி தொடங்கிய பயணம் பிறகு சரித்திர ஆய்வாளர்களோடு தொடர்பு என நீண்டு வரலாறு என்றொரு இணையத்தளத்தினை உருவாக்கி அதில் சரித்திர ஆய்வு குறித்த தகவல்களை ஒன்றுதிரட்டும் முயற்சியில் ஈடுபட தூண்டியது. பலவிதமான வரலாற்று தகவல்கள் இங்கே திரட்டப்பட்டுள்ளன.

வரலாறு ஆய்வு தளத்தினைப் போலவே சென்னையில் உள்ள வரலாறு மற்றும் பண்பாடு குறித்த ஆர்வமுள்ளோர் தொடர்ந்து எழுதி நடத்தி வரும் வலைப்பதிவு 'தமிழ் பாரம்பரியம்'. ஆங்கிலத்தில் பல பதிவுகள் இருந்தாலும் தமிழிலும் நிறைய எழுதியிருக்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுலகில் எந்த சார்பும் அல்லாத ஆய்வு கண்ணோட்டத்தில் வரலாற்றுக்காக நடத்தபடும் வலைப்பதிவு சொற்ப எண்ணிக்கையில் இருப்பதால் இந்த வலைப்பதிவு கவனிக்கதக்க வலைப்பதிவாக இருக்கிறது. பிரபல வலைப்பதிவர் பத்ரி சேஷாத்ரி இதை நடத்தி கொண்டிருக்கிறார்.
முனைவர் பா. ஜம்புலிங்கம் சோழ நாட்டில் பௌத்தம் என்றொரு வலைப்பதிவு எழுதி கொண்டிருக்கிறார். பல ஆய்வு கட்டுரைகள் இதில் தொடர்ந்து பதிவாகி வருகிறது.

...மேலும் பேசுவோம்...

10 comments:

  1. அறிமுகங்கள் அருமை அய்யா

    ReplyDelete
  2. சத்தியமா நான் கொல்லலை சாமி!

    ReplyDelete
  3. அருமையான வலைத்தளங்களை அறிமுகம் செய்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. மிகவும் அருமையான பகிர்வுகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் !

    ReplyDelete
  5. அறியாத தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    ReplyDelete
  6. குந்தவைதான் கொலையாளியா? ஆதாரங்களுடன் ஒரு அலசல்

    இந்த மாதிரி தலைப்பைப் பார்த்தா இந்த லின்க் போட்டு விடுவோம்

    ReplyDelete
  7. எனது வலைப்பூவை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. தங்களின் எழுத்து என்னை இன்னும் எழுதவும் ஆய்வு செய்யவும் துணை புரிகிறது. ஜம்புலிங்கம்

    ReplyDelete
  8. கரந்தை ஜெயக்குமார், அருள், அப்பாதுரை, இமா, இக்பால் செல்வன், தனபாலன், சுரேஷ் & ஜம்புலிங்கம் ஆகியோருக்கு நன்றி!

    ReplyDelete
  9. அறிமுகமான அனைத்துத் தளங்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள் நன்றி பகிர்ந்துகொண்ட ஆசிரியருக்கு .

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது