07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 22, 2009

பயணங்களில்....

வாழ்வின் சுவாரஸ்யமான விசயங்களில் பயணங்களும் உண்டு.....அது ரயில் பயணமோ அல்லது பேருந்து பயணமோ....பல வித்தியாச அனுபவங்கள் வித்தியாச மனிதர்கள் என்று மிக சுவாரஸ்யமாக இருக்கும்.....

அந்த அனுபவங்கள் போல் ஒரு உன்னத அனுபவமாகி விட்டது என் வலைச்சர அனுபவம்.....

பல நல்ல நண்பர்களை அடையாளம் காட்டியது...

ஜமால்

குடந்தை அன்பு அண்ணன்

ரம்யா அக்கா...

நிலா அம்மா

பார்சா குமாரன்

கோமா அக்கா

கணினி தேசம்

மற்றும் பலர்....

அவர்களுக்கு என் நன்றிகள்....

உண்மையை சொல்ல வேண்டியதாயின் ,
எனக்கு உண்மையில் அந்த அளவுக்கு பிற தளங்களுக்கு அல்லது வலைகளுக்கு போகும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை ...
என் அனுபவம் மிக குறைவு.., பெரும்பாலும் நெட் சென்டெர் தான் போக வேண்டி இருப்பதால் , நான் என்னுடைய வலையிலயே பொழுதை கழித்து விட்டேன்....

என் குறைவான அறிமுகங்களுக்கு மன்னித்து கொள்ளுங்கள்....

எழுத வந்தபோது எவ்வாறு நாம் எழுத போகிறோம் என்று விழித்தேன் , சீனா அண்ணன் கொடுத்த தைரியத்திலயே எழுதினேன்...

சீனா அண்ணன் உண்மையில் கிரேட்.....

நல்ல ஒரு அனுபவம் அமைய காரணமாக இருந்தார்....
என்னை பொருத்த வரை....

எனக்கு தெரிந்து சிரிப்பை விட நல்ல வரவேற்பு இருக்க முடியாது..
அந்த சிரிப்பிலேயே நாம் ஒரு சிறந்த விருந்தோம்பலை கொடுத்து விட்டோம் என்று சொல்லலாம்..நினைத்து பாருங்கள் நாம் ஒரு நண்பரின் வீட்டுக்கு போகிறோம் அவர் சிரிக்காமல் வா என்று மட்டும் சொல்லிவிட்டு அறுசுவை உணவை வழங்கினாலும் நம் மனதில் அவர் முகமே உறுத்தும்...
நண்பர்களையோ,தெரிந்தவர்களையோ வழியில் பார்க்கிறீர்களா,பேச விருப்பம் இல்லையா,முகத்தை மறைக்காமல் சின்ன சிரிப்பை உதிர்த்து விட்டு செல்லுங்கள் அது உங்களுக்கு நல்ல மனநிலையை மட்டுமல்ல எந்த ஒரு இறுக்கமும் இல்லாத சூழ்நிலையை தரும் ,அந்த நண்பரின் மனதுக்கும் ஒரு புத்துணர்ச்சியை தரும் அதை விட்டு இவன் எங்கே வந்தான் என்று என்னும் வண்ணம் முகத்தை இறுக்கமாக வைத்து கடக்காதிர்கள்.
இரண்டு நாட்கள் முன்பு ஒரு ரயில் பயணம் செல்ல வேண்டி இருந்தது,வண்டியில் ஏறிய உடன் பக்கத்திலே கதவோரம் இருந்த ஒருவன் அவன் பாட்டுக்கு சிரித்து கொண்டே இருந்தான்..முதலில் பைத்தியம் என்று நாங்கள் இருந்தோம்,சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்கள் முகத்திலும் எனது முகத்திலும் கூட அவன் சிரிக்கும் நேரங்களில் சின்ன புன்னகை...மனம் அவ்வளவு நேரம் யோசித்து வந்த அனைத்தையும் மறந்து அமைதியானது போன்ற ஒரு உணர்வு,நான் அருகில் இருந்தவரை பார்த்து சிரிக்க அவரும் என்னை போன்று ஏதோ பல நாள் பழக்கம் போல என்னிடம் சிரித்து பேசினார்,அருகில் அமர்ந்திருந்த ஒரு வட நாட்டு பெண் எங்கள் பேச்சு புரியாவிட்டலும் கண்களால் எங்களை விட அதிகமாக சிரித்தாள்,இள நகை புரிந்த வண்ணம் இருந்தாள்...அந்த பைத்திய (சாரி) கதவருகே இருந்த அந்த சிரிப்பு மனிதர் இறங்கி போக எங்களிடம் அந்த கள்ளம் இல்லாத சிரிப்பு மிச்சம் இருந்தது..எனது ஊரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன்,அருகே யாரோ நடந்து செல்ல,அவர்கள் முன் என் சிரிப்பை விருந்தோம்பல் ஆக்கினேன்..முதலில் தயங்கிய அவர் மீண்டும் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்...
நிஜமாகவே சிரிப்பு ஒரு மிக பெரிய தொற்று -------?தயவு செய்து முடித்து கொடுங்களேன்....

இன்று விடை பெறும்போது , நல்ல ஒரு பயணத்தை இழக்கிறோமே என்ற வருத்தத்தில் இருப்பது எனக்கே தெரிகிறது....

ஊக்கம் அளித்தமைக்கு நன்றிகள் நண்பர்களே.....

கண்ணீருடன் விடை பெறுகிறேன் நன்றி...உங்கள் கார்த்தி....

நேரம் கிடைக்கும் போது என் வலைக்கும் வாருங்கள்....

கூல் கார்த்தி....

Be Cool...

Stay Cool...

4 comments:

  1. செய்ததை திருந்தச்செய்தீர்கள் கார்த்தி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்வாழ்த்துகள் நன்றி கார்த்தி - பிறகு சந்திப்போம்

    ReplyDelete
  3. நல்வாழ்த்துகள் நன்றி கார்த்தி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது