07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, July 10, 2011

சென்று வருக ராஜா !!!!! வருக ! வருக ! ஆனந்த்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற ராஜா - வீட்டில் கணினியோ இணையத் தொடர்போ இல்லாத காரணத்தால் வெளியில் சென்று அத்தனை பதிவுகளையும் எழுதி சேமித்து விட்டு, ஒவ்வொரு நாளும் அலை பேசி வழியாக அவைகளை ஒவ்வொன்றாக வெளியிட்டிருக்கிறார். உழைப்பின் பலன் தெரிகிறது.

12 பதிவுகள் இட்டிருக்கிறார். அவற்றில் கடைசி இரண்டு பதிவர்களை அறிமுகப் படுத்துவதாக இல்லை. மற்ற பத்தில், ஏறத்தாழ நூறு பதிவர்களின் இடுகைகளை அறிமுகப் படுத்தி உள்ளார். கிட்டத்த்ட்ட 185 மறுமொழிகள் இது வரை பெற்றிருக்கிறார். இதுவே ஒரு சாதனை தான்.

பல சிரமங்களுக்கு இடையே, தான் ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி, நம்மிடமிருந்து விடை பெறுகிறார். அவரை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் ஆனந்த். இவர் பேநாமூடி என்னும வலைப்பூவினிலும், கிறுக்கல்கள் என்னும் வலைப்பூவினிலும் எழுதி வருகிறார். கணினித்துறையில், சென்னையில் பணி புரிகிறார். தஞ்சையைச் சார்ந்தவர். உலக சினிமாக்கள் பார்ப்பதில் அதிக ஆர்வமுடையவர். எழுதுவதை விட படிப்பதில் ஆர்வம் அதிகம் உடையவர்.

நண்பர் ஆனந்தினை வருக ! வருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ராஜா
நல்வாழ்த்துகள் ஆன்ந்த்

நட்புடன் சீனா

6 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. என்னை பொறுப்பேர்க்க செய்தமைக்கு நன்றிகள்...,

    ReplyDelete
  3. வாருங்கள் நண்பரே தொடருங்கள் உங்கள் சேவையை.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது