07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 22, 2010

Popular Among The Popular

நான் ரசித்த சில பிரபலங்களின் இடுகைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். நித்தியானந்தா பற்றிய நித்திய நினைவுகளை சாரு தன் நித்திரையிலும் பிளாகிலும் அழித்துவிட்டதால் அந்த நவரச பதிவுகளை இங்கே அறிமுகப்படுத்த முடியாத கடமை தவறிய பதிவராக நான் வெட்கப்படுகிறேன்.

இவை தற்போது நினைவிலிருந்த பிரபலங்களின் பதிவுகள் மட்டுமே. இன்னும் நான் ரசிக்கும் நிறைய பிரபலங்கள் நிறைய பிரபல பதிவுகள் மிச்சமிருக்கிறதென்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

**********

நான் தொடர்ந்து பலமுறை ஒரு பதிவை வாசித்திருக்கிறேன் என்றால் அது சுஜாதா பற்றி உண்மைதமிழன் எழுதிய இந்த பதிவு தான். உண்மையில் இந்த கட்டுரையை முதல்முறை வாசித்துமுடித்தவுடன் உடனடியாக அவரை நேரில் சந்தித்து பேசவேண்டும் போல் இருந்தது. அவரது பதிவுகள் நீளமாக இருப்பினும் இதுவரை போர் அடித்ததில்லை.

என் இனிய சுஜாதா

*******

உங்களில் யார் அடுத்த நயன்தாரா என்று வளரும் நடிகைகளான புடவைகட்டிய வெள்ளரி பிஞ்சு தமன்னாவிடமும் , புடவையே கட்டாத புண்ணிய புதல்வி அனுக்ஷாவிடமும் வேறு வழி இல்லாமல் ஸ்ரேயாவிடமும் கேட்டு தொலைத்தபோது எல்லோரும் கோரஸாக அடுத்த நயன்தாரா யாருன்னு தெரியல ஆனா அடுத்த ரமலத் நயன்தாரா தான் என்றார்கள்.



*********

எனக்கு அந்த கதை ஞாபகத்தில் இருக்கிறது. கதையின் பெயர் நினைவில் இல்லை. ஒரு சிறுவன்...ஒரு டெலிபோன்....காண்டம் வாங்கிவிட்டு வருவான்....எப்போது அது எழுதப்பட்டது. தேதி தெரிந்தால் தேடி பார்க்கலாம்.
எஸ்...எஸ்..வந்துவிட்டது. என் நண்பர் ஒருவருக்கு கூட மெயில் அனுப்பியிருந்தேன். சென்ட் ஐட்டம்ஸில் தேடி தேதியை கண்டு பிடித்து பதிவை நெருங்கிவிட்டேன்.
இதோ பதிவு பத்து - பத்து.

*********
சுஜாதா இல்லாத முதல் புத்தாண்டு - 2009. சுஜாதா இருந்திருந்தால் என்ன எழுதியிருப்பார்?

*********

இந்த பதிவை படித்துவிட்டு நானும் என் நண்பர்களும் மகாபலிபுரத்திலும் திருவான்மியூர் ஜங்க்ஷனிலும் நின்றுகொண்டு ஈ.சி.ஆர்.க்குள் நுழையும் பஸ் ஆட்டோ லாரி கார் இப்படி சகல வாகங்களையும் நிறுத்தி வயது பெண்களை எல்லாம் இறக்கிவிட்டு சமூக சேவையில் ஈடுபட்டோமென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போது நான் கூட இந்த பதிவை படித்துவிட்டு ஒரு கதை எழுதியிருந்தேன். ஈ.சி.ஆரின் மர்மங்களை ஈஸியாக புரிந்துகொள்ள.

ஐய்யோ நான் லோக்கல் இல்லீங்கோ அதுக்கும் கீழ தர டிக்கெட்!!!

*********

நீ சிரித்தால் சிம்லா என்றேன் தோழியிடம். அவள் கோபித்துக்கொண்டு போய்விட்டாள். பிறகு தான் தெரிந்தது. தோழியின் அலுவலகத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கும் அழகிய வடநாட்டு பெண்ணின் பெயர் சிம்லா என்று. இப்போது சிம்லாவிடம் சொல்லிக்கொண்டிருக்கிறேன் நீ சிரித்தால் காவேரி என்று.


*************

சிலர் எழுத்துக்கூட்டி எழுத ஆரம்பித்து கொஞ்ச நாளிலேயே மேதாவி எழுத்தாளர் ஆகிவிடவேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். வார்த்தை பிரயோகங்கள் பயமுறுத்தும்.
உண்மையான மன உணர்வுகளை பகிரவும் புரிந்துகொள்ளவும் மேதாவித்தனமான மொழி அவசியமில்லையே. காக்கை - நெகிழ்வு.

*************

5 comments:

  1. கலக்கல் அறிமுகங்கள்..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. பகிர்வுகள் நன்று ...

    சூப்பருங்கோ

    ReplyDelete
  3. சிறப்பான அறிமுகங்கள்! நன்றி!

    ReplyDelete
  4. அருமையான தொகுப்புண்ணா. கடைசி லின்க் அற்புதம், உங்கள் கதைகளில் வரும் கடைசி பாரா போல. பதிவுக்கும், பகிர்ந்தமைக்கும் நன்றி.

    ReplyDelete
  5. உண்மைத் தமிழனின் பதிவு சூப்பர். பகிர்விற்கு நன்றி

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது