07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 31, 2008

வலையுலகின் முப்பெரும் தேவிகள்!!!

துளசி கோபால்:

துள்சி என்று என்னால் அன்போடு அழைக்கப்படுபவர். கையில் மயிலிறகையே குச்சியாக
வைத்துக்கொண்டு வலையுலகின் மாணவர்களை மிரட்டிக் கொண்டிருப்பவர். அன்பான அதேநேரம் கண்டிப்பான 'டீச்சர்'

இவர் வகுப்பில் ஒரு நாளாவது முதலாவது பெஞ்சில் அமர வேண்டும் என்று முயற்சிக்கிறேன்,
முடியலையே!! 'மீ த ஃப்ஸ்ட்'னு ரெடியா பின்னோட்டம் போட்டு வச்சிருப்பாங்க போல.
படிக்கிறாங்களோ இல்லையோ இதை மட்டும் போட்டு விட்டு க்ளாசை விட்டு வெளியேறி
விட்டு பிறகு சாவகாசமாக வந்து படிப்பார்கள்.

அனேகமாக முடிந்த வரை இவரது எல்லாப் பதிவுகளும் படிச்சிருக்கேன். நியூஸிலாந்தின் முக்கியமான இடங்களுக்கெல்லாம் நம்மையும் கையைப்பிடித்து கூட அழைத்துக்கொண்டு போவது போல் ப்ரம்மை ஏற்படும் படி எழுதிச்செல்வார். அழகழகான பொருட்கள், செடிகள், மலர்கள்,
காய்கனிகள் எல்லாம் அறிமுகப்படுத்துவார். 'பூண்டு' என்றால் என்னை நினைக்காமல் இருக்கமுடியாது துளசியால்!!!!

ஆரம்பத்தில் பின்னோட்டங்கள் ரொம்ப
பளபளப்பாக(பாலீஷ்டாக) யாரையும் சலனப்படுத்தும் படியில்லாமல் வெகு ஜாக்கிரதையாக
கமெண்டுகள் போட்டுக்கொண்டிருந்தேன். துளசியின் பின்னோட்டங்கள் படித்த பின்தான்
அனைவருமே ஜாலியாக கும்மியடிப்பவர்கள் என்று புரிந்து நானும் 'வடம்' விட ஆரம்பித்தேன்.

நான் மிகவும் ரசித்த பதிவு....'வீடு 'வாவாங்குது' கொத்தனார்கள் இலவசமாகக் கிடைக்காத
ஊரில் தாங்களே வீடு கட்டிய விதத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.படித்துப்பாருங்கள்.
சாஸ்தரத்துக்கு ஒன்று.
வீட்ட சுத்திப் பாருங்க


வல்லிஸிம்ஹன்
என் பதிவு ஒன்றில், 'எந்த ஊர் நானானி நீங்க?'என்று ஓடோடி வந்து அன்பாய் அணைச்சுக்கிட்டவர். அதே அன்பு இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரவேண்டும்.
துளசி பின்னோட்டங்களில் ஜாலியான கலாய்ப்பு இருக்குமென்றால் இவரது பின்னோட்டங்களில்
அன்பும் பாசமும் வழியும். 'என்னப்பா...நல்லாருக்குப்பா..என்று கான்வெண்ட் பாஷையை
நினைவூட்டியவர். வருடத்தில் ஆறு மாதங்கள் அமெரிக்கா, துபாய், சுவிஸர்லாந்து என்று
இவரும் நம்மைக் கூட்டிப்போவார்.

திருச்சி ஏர்போர்ட் ரோட்டில் கார் ஓட்டிய மகாத்மியத்தை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்.
பிபீம்பிபீம்

துவைக்கிற மிஷினில் துவைக்கப் போய் தரையை துடைத்த கதையை நொந்த நூலாக
சொல்லிய விதம் வயிறு வலிக்க சிரிக்கவைக்கும்.
நீங்களும் சிரிங்க

தன் பெற்றோர் திருமணம் எப்படி பெண் பார்ப்பதில் ஆரம்பித்து திருமணம் வரை ரசித்து
எழுதியிருப்பார். மாமியார் ஸ்தானம் எவ்வளவு அவஸ்தையானது என்று புரியும்.
அப்பாஅம்மாகல்யாணம்

கீதா சாம்பசிவம்
வலையுலகின் தலைவி என்று அழைக்கப்படுபவர்.
இவரது எண்ணங்கள் எல்லாம் தெய்வங்களைச் சுற்றியே இருக்கும் என்பதற்கு இராமாயண
காவியத்தையும் ஸ்ரீஐயப்பன் கதையையும் முழுவதும் பதிவுகளிலேயே சொல்லியிருப்பது.
பின்னோட்டங்கள் வந்தாலும் வராவிட்டாலும் 'கடமையைச் செய், பின்னோட்டங்களை
எதிர்பார்க்காதே' என்ற கண்ணோட்டத்தோடு பதிவிட்டுக்கொண்டேயிருப்பார். நானும் மேலோட்டமாக பார்ப்பேன், பின்னோட்டங்கள் போட்டதில்லை என்பதை தயக்கத்தோடு
சொல்லிக் கொள்கிறேன். ஐயப்பன் பூஜைக்கு அழைத்தார். என்னால் போகமுடியவில்லை.
ரொம்ப வருத்தம்.
கீதாம்மா..!என்றதற்கு 'அம்மாவா..? என்று கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டுவிட்டார். அதுமுதல்
கீதாதான்! ஆமாம்! அவரோட கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரும் காதிலிருந்து வரும் புகையும் ரொம்ப
பிடிக்கும்.
கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு ஒரு பதிவு. ஏன் கார்த்திகைமாதம் வீடுகளில் தீபம் ஏற்றுகிறோம் என்று தெரியாமலேயே ஏற்றிக்கொண்டிருகும் நமக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பாருங்க
//இந்த உடல்நலக் கேட்டில் இருந்து தப்பிக்க விரதமும், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குப் போகவும், ஈரப் பதத்தில் இருந்து உஷ்ணம் பெறவும், இவ்வாறான பல காரணங்களையும் உத்தேசித்துக் கார்த்திகை முதல் தேதியன்றிலிருந்தே பெரும்பாலான வீடுகளில் விளக்குகள் நிறைய வாசலில் வைக்கப் படும். // இப்ப காரணம் புரிகிறதா?

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா? என்பது போல ஆறு மாத அமெரிக்க
வாசம் முடிந்து ஊர் திரும்பியவுடன் வீடு இருக்கும் 'கந்தரகோளத்தை'.....அந்த அவஸ்தையயும் அதை சரிசெய்த கதையயும்.....சிரமத்தை சிரிக்க சொல்லியது ரசிக்க
வைத்தது. காரணம் அதை ஓரளவு அனுபவித்தவளல்லவா!
குழாயை திறக்க அது கையோடு வந்து தண்ணீர் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டு அடித்து கீதாவை
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரடிக்க வைத்தது நல்ல நகைச்சுவை.
சொர்க்கம் இங்கே

துளசி, வல்லி, கீதா மூவருமே வலையுலகின் முடிசூடா ராணிகள்!!!மூவரின் நட்பும் அன்பும்
பாசமும் கிடைக்க 'உடன்பிறவா சகோதரிகளாக' ஐய்யய்ய....அது வேண்டாம்.
சகோதரிகளாக வலம் வருவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

47 comments:

  1. aakaa நானானி

    வலயுலகின் முப்பெரும்தேவியரை அறிமுகம் ( தேவையா - மல்லிகைப்பூ - விளம்பரம்) செய்தது நன்று. அவர்களின் பதிவினில் நீங்கள் படித்து ரசித்த பதிவுகளைச் சொல்லிய விதம் அருமை.

    ReplyDelete
  2. மீ த பர்ஸ்டா ? என்ன இப்பல்லாம் நான் ஒருத்தன் தான் வேலை இல்லாம இருக்கேனா ? அய்யே

    ReplyDelete
  3. மூன்று முடிசூடா ராணிகளின் முத்தான பதிவுகளைப் பற்றியும், பண்புகளைப் பற்றியும் நான்காவது முடிசூடா ராணியாகிய தாங்கள் எடுத்துரைத்திருக்கும் விதம் அருமையிலும் அருமை.

    ReplyDelete
  4. இப்ப தான் தமிழ் மணத்தில் நான் கொடுத்தேன்... அதுக்கு முன்னேயே கமெண்டா...

    ReplyDelete
  5. முப்பெருந்தேவியரின் பதிவுகளுக்கு அன்பனின் நன்றிகள்... :)

    ReplyDelete
  6. நாங்க மூவரும் 'கல்வியா செல்வமா வீரமா'ன்னு பாடிக்கிட்டே மேகத்தில்போகும் நானானியின் 'அன்பு'க்குப் பாத்திரம்(???) ஆகிட்டோமா?

    ஆஹா ஆஹா அஹ்ஹஹ்ஹா:-)

    ReplyDelete
  7. அதுவும் கடைசி வரிகள் நானானி பஞ்ச்:)))!

    ReplyDelete
  8. அதெல்லாம் முடியாது நாங்க உபிச வாகவே இருப்போம். எங்களுக்கு மட்டும் வைர ஒட்டியானம் வேணாமா?

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. வைர ஒட்டியானம் வேணாமா?

    ReplyDelete
  11. நாங்க வைரக்கிரீடம் வெக்கலாம்னுல இருக்கோம்!!

    :)

    ReplyDelete
  12. அருமை! அருமை! அருமை! அருமை!.....எதுக்கு நாலு, முப்பெரும் தேவியரைப்பற்றி எழுதிய நாலாவது தேவிக்கும் சேர்த்து....:)

    உய்...உய்...உய்..உய்...

    பி.கு.:அப்பாடா! கீ-போர்டிலாவது நல்லா விசில் அடிக்கிறேன் :D.

    ReplyDelete
  13. //மீ த பர்ஸ்டா ? என்ன இப்பல்லாம் நான் ஒருத்தன் தான் வேலை இல்லாம இருக்கேனா ? அய்யே
    //

    இல்ல சீனா ஸார். ஊர் ஊருக்கு வேற வேற நேரத்துல விடியுதே.நீங்க தான் முதல்ல எழுந்து கோழிய எழுப்புறீங்க போல....:P :D

    ச்சும்மாஆஆஆஆஅ..:)))

    ReplyDelete
  14. //துளசி கோபால்...

    'மீ த ஃப்ஸ்ட்'னு ரெடியா பின்னோட்டம் போட்டு வச்சிருப்பாங்க போல.
    //

    ஆமாவா! இதனாலதான், நான் டீச்சர் கிளாஸில் 'மீ த ப்ர்ஸ்ட்' இல்லையா? :((...:P

    ReplyDelete
  15. //தன் பெற்றோர் திருமணம் எப்படி பெண் பார்ப்பதில் ஆரம்பித்து திருமணம் வரை ரசித்து
    எழுதியிருப்பார்//

    ஆமாம்! ரசித்துப்படித்தேன். :)).

    வல்லியம்மா பதிவில், இரண்டு நாள் முன்னாடிதான், நான் 'மீ த பர்ஸ்ட்' போட்டேன் என்பதையும் இங்கேத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொ'ல்'கிறேன். :))

    ReplyDelete
  16. //கீதா சாம்பசிவம்....

    குழாயை திறக்க அது கையோடு வந்து தண்ணீர் விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரிட்டு அடித்து கீதாவை
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரடிக்க வைத்தது நல்ல நகைச்சுவை//

    இதில் உள்ள உரல், 'அனுபவம்' என்ற பதிவிற்குச்சென்றது. அதைப்படிக்கும் போதே எனக்கும் பரபரப்பு ஏற்பட்டது, இறுதியில் கால் வலித்தது. நல்ல நடை :)))

    ReplyDelete
  17. ம். இவங்க மூன்று பேர் பதிவுக்கும் விளம்பரம் தேவையா? குழந்தைய கேட்டாகூட தெரியுமே!

    இருந்தாலும் பதிவு அருமை.

    ReplyDelete
  18. //துளசி, வல்லி, கீதா மூவருமே வலையுலகின் முடிசூடா ராணிகள்!!!//
    உண்மை ! உண்மை !! உண்மை !!!

    ReplyDelete
  19. அருமை! அருமை! அருமை! அருமை!.....எதுக்கு நாலு, முப்பெரும் தேவியரைப்பற்றி எழுதிய நாலாவது தேவிக்கும் சேர்த்து....

    உய்...உய்...உய்..உய்// this this this:)
    Ithu romba pidiccirukku.

    ReplyDelete
  20. Naanaani, thank you for the high

    praise you have shaowered on us.

    THough THulasi,Geetha deserve
    the praise. thery really work hard to write everything in an
    authentic manner. like you.:)

    ReplyDelete
  21. மல்லிகைப்பூக்களுக்கு விளம்பரம் தேவையில்லைதான்...ஆனாலும் அப்பப்ப தண்ணீர் தெளித்து வாடாமல்
    பாத்துக்கொள்வதில்லையா? அதுபோல்தான்....சீனா!

    ReplyDelete
  22. பொறுப்பாசிரியருக்கு இதுக்கப்புரம்தான் மத்த வேலை.....!
    ஆமா..சொல்லிப்புட்டேன்.

    ReplyDelete
  23. ராணியெல்லாம் வேண்டாம் ராமலஷ்மி! ஒரு சாதாரண பிரஜையாகவே இருக்க விரும்புகிறேன்

    ReplyDelete
  24. தமிழ்பிரியன்!
    அவர்கள் எல்லாருக்கும் பொது.
    யார் வேணுமானாலும் எப்போது வேணுமானாலும் எங்கே வேணுமானாலும் எழுதலாம். சரிதானே?

    ReplyDelete
  25. நன்றுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன, தமிழ்பிரியன்!!

    ReplyDelete
  26. அப்ப நான் நாரதரா? துள்சி!
    பரவாயில்லை எல்லாம் நன்மையில்தானே முடியும்.
    நாராயணா...நாராயணா...!!

    ReplyDelete
  27. அந்த பஞ்சுக்கே துள்சி பயப்படலையே?
    வைர ஒட்டியாணம் வேணுமாமே!!!

    ReplyDelete
  28. தமிழ்நெஞ்சத்துக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  29. சுத்திசுத்தி வந்தீக சுட்டுவிரலால் தட்டுனீங்க....கீபோர்டில் விசிலடிக்க
    எனக்கும் கத்துக் கொடுங்க தேனீஈஈஈ!

    ReplyDelete
  30. துள்சி....! மைர ஒட்டியாணமா?
    போட்ருவோம். ஆனால் வெளியே
    இருக்கமுடியாது. சேரியா?
    வைரநகைகளாக வெய்து வைத்துக்கொண்டு, ஆசை தீர அணிந்து பார்க்கவும் முடியாமல் பதுங்கியிருந்த சீட்டுக்கம்பனி பெண்கள்
    பற்றி எல்லாம் தெரியும். இப்ப...
    வைர ஒட்டியாணம்...வேணுமா? வேணாமா?

    ReplyDelete
  31. அதைதான் துள்சியிடம் கேட்டிருக்கிறேன், வேணுமா? வேணாமா?ன்னு.

    ReplyDelete
  32. வையுங்கோ நான் வேணாங்கலை.ஹி..ஹி..!

    ReplyDelete
  33. வேணும் வேணும் வேணும்.

    ஜம்முன்னு போட்டுக்கிட்டுச் சூப்பர் மார்கெட்டுக்கெல்லாம் போவேன்.

    யாரும் சட்டை பண்ணப்போறதில்லை என்பதுதான் கொஞ்சம் விசனம்:-)

    ReplyDelete
  34. பாவம் சீனா! அவரை ஏன் கலாய்க்கிறீங்க? புதுத்தேனீ?

    ReplyDelete
  35. ஆமாம் தேனீ! இந்த 'மீ த ஃபஸ்ட்'
    பத்தி எனக்கு பெரும் சந்தேகம்!!

    ReplyDelete
  36. வல்லியின் அந்தப் ப்திவை நான் ரசித்துப் படித்தேன்.

    ReplyDelete
  37. எனக்கு ஊரல் கொடுப்பதில் சரியாகவரவில்லை. அதுதான் காரணம். ஆமாம்...? எனக்கு ரெக்கைகள் அல்லவா வலித்திருக்கவேண்டும்? கால்கள் எப்படி வலித்தன? தேனீ?

    ReplyDelete
  38. மங்களூர் சிவா!
    தினம் தினம் பூக்கடைக்குப் போய்
    பூவாங்குவதில்லையா? அது போல்தான்.
    பாராட்டுக்கு நன்றி!!

    ReplyDelete
  39. வழி பொழிந்ததுக்கு மிக்க நன்றி!
    அறுவை பாஸ்கர்!

    ReplyDelete
  40. வழி மொழிந்ததுக்கு மிக்க நன்றி!
    அறுவை பாஸ்கர்!

    ReplyDelete
  41. ரொம்ப சந்தோசம்ப்பா!!

    ReplyDelete
  42. நானானி, நான் செஞ்ச அதே தப்பை நீங்களும்......

    அவர் அறுவை இல்லைப்பா. அருவை.
    அருப்புக்கோட்டை பாஸ்கர்:-)

    ReplyDelete
  43. உங்க ஊர்ல ஒட்டியாணம் போட்டுக்கிட்டா?....சூப்பர்மார்கெட்டுக்கா? கண்ணு கூசப் போவுது! துள்சி!

    ReplyDelete
  44. டீச்சரம்மாவுக்கு நன்றி! என் பிழைதிருத்தியதுக்கு. ஸாரி! அறு...அருவை பாஸ்கர்!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது