07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, July 10, 2008

டீச்சரின் வலைத்தளம்.

டீச்சருக்கு அறிமுகம் தேவையில்லை.
நமது அன்பான துளசி டீச்சர்.

இவர் பதிவுகளில் எதை விடுப்பது, எதை எடுப்பது ரகம்.

எல்லாம் சூப்பருன்னு சொன்னேங்க.

சரி நான் படித்ததில் பிடித்தது இனி:

நம்மை எல்லாம் ஒரு கோயிலுக்கு சுற்றுலாகூட்டிகிட்டு போனாங்க. அந்த வகுப்பு நீங்க
மிஸ் செஞ்சிருந்தா இங்க போயி படிக்கலாம். :)

***********************************************************


தண்ணிக்குள்ள என்னைப் பாரு பதிவை படிச்சிருக்கீங்களா?

இல்லைன்னா இங்க போய் படிங்க.

*************************************************************

டீச்சர் அப்பப்ப குக்கரி கிளாஸ் எடுப்பாங்க.
பீர்க்கங்காய வைச்சு ஒரு கிளாஸ் நடந்துச்சு.
ஐயோ! அன்னைக்குன்னு பார்த்தா லீவு எடுத்துட்டீங்க!!!

சரி! போனா போகுது இங்க போனா கத்துக்கிடலாம்.
நம்ம வசதிக்காகத்தான் டீச்சர் பதிவு செஞ்சு வெச்சிருக்காங்க.

************************************************************

டீச்சர் ஹனிமூனுக்குத் தனியா போகப் போறதைச் சொன்ன
பதிவுலையும் நமக்கு பல தகவல்கள் கிடைச்சிருக்கு.

சரி சரி. லீடு எடுத்துததுக்கு புலம்பாம இங்க போய் பாருங்க.

நாம் பார்த்ததை, மகிழ்ந்ததை, நெகிழ்ந்ததை பகிர்ந்து கொள்வது
ஒரு சுகம். பலருக்கு அது பாடமாகவும், அறிந்து கொள்ளவும்
வசதியாயும் இருக்கும்.

அதனால மனசுல பட்டதை, பார்த்ததை பதிவாக்கிடுங்க.

யார் கண்டா நாளை அதுவே ஒரு பொக்கிஷமாகக் கூடும்.

17 comments:

  1. ///யார் கண்டா நாளை அதுவே ஒரு பொக்கிஷமாகக் கூடும்.///

    இன்றே பொக்கிஷம் தான்!

    ReplyDelete
  2. //எல்லாம் சூப்பருன்னு சொன்னேங்க.///

    ரிப்பீட்டேய்....(நான் அதிகம் அங்க கமெண்ட் போட்டதில்லை ஆனா படிச்சிருக்கேன்)

    ReplyDelete
  3. டீச்சரின் பதிவு கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவுகள்.,.. புதியவர்களுக்கு நல்ல பாடங்கள் கற்றுக் கொள்ளும் பள்ளிக்கூடம்... :)

    ReplyDelete
  4. என் குருவைப்பற்றிய இந்தபதிவை வாழ்த்தி வணங்குகிறேன். :)

    ReplyDelete
  5. டீச்சருக்கு இப்படி ஒரு (இன்ப) அதிர்ச்சி
    கொடுத்துட்டீங்க!!!

    ( இதுக்காக வரும் தேர்வுகளில் கிரேஸ் மார்க் கொடுக்கலாமா வேணாமான்னு இப்ப என்னை(யே) யோசிக்க வச்சட்டீங்க)

    கயலு,
    நல்லா இரும்மா?

    வகுப்புலே நல்ல மாணவர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்.
    பிடிச்சிருக்கு ....எனக்குப் பிடிச்சிருக்கு:-))))

    ReplyDelete
  6. வாங்க தமிழ்ப் ப்ரியன்,

    நல்லாச் சொன்னீங்க

    நன்றி.

    ReplyDelete
  7. வாங்க கயல்விழி,

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  8. வாங்க துளசி டீச்சர்.

    டீச்சரைப் போற்றுவதும் நற்பண்பு.

    நல்ல டீச்சர் அமைவது இறைவன் நல்ல மூடுல இருக்குற போது நமக்கு கொடுத்த வரம்.

    ReplyDelete
  9. //பிடிச்சிருக்கு ....எனக்குப் பிடிச்சிருக்கு//

    என்ன டீச்சர், பிஜில பாத்தீங்களோ? மணி ரத்னம் படம் ஏதும் பாத்தீங்களோ? :)))

    ReplyDelete
  10. உண்மைதான்! டீச்சரின் பதிவுகள்
    பொக்கிஷமாகவும் ஆகலாம். அவ்வளவு விஷயங்கள்...புரிந்தது,புரியாதது, தெரிந்தது, தெரியாதது, அறிந்தது, அறியாதது, பார்த்தது, பார்க்காதது,
    போனது,போகாதது, வந்தது,வராதது.....ஹப்பா! உஸ்..உஸ்ஸ்!!
    அனைத்தும் பதியும் பதிவுலக முடிசூடா...டீச்சர்! கையில் கோலிருக்கும்..அதன் பேர் மயிலிறகு!!!!

    ReplyDelete
  11. துளசி கோபால் said...//வகுப்புலே நல்ல மாணவர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்.//

    அட, இதையேதான் இன்று நானும் சொல்லியிருக்கேன் உங்கள் பதிவின் பின்னூட்டத்தில்..

    நானானி said...
    //கையில் கோலிருக்கும்..அதன் பேர் மயிலிறகு!!!!//

    ஆமாம் நானானி, குட்டைக் கூட ஷொட்டாகத்தான் கொடுப்பாங்க:))

    ReplyDelete
  12. நான் எழுதக் கற்றுக் கொண்டது துளசியைப் பார்த்து,படித்துதான்.

    இவ்வளவு எழுதியும் இன்னும் அது தலைக்கேறாமல்,
    இன்னும் அதே துளசியாக இருப்பதுதான் எனக்கு அதிசயம்.

    வாழ்த்துகள் தென்றல்.

    ReplyDelete
  13. அனைத்தும் பதியும் பதிவுலக முடிசூடா...டீச்சர்! கையில் கோலிருக்கும்..அதன் பேர் மயிலிறகு!!!!

    ரொம்பச் சரியா சொன்னீங்க நானானி.

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  14. வாங்க ராமலஷ்மி,

    ரிப்பீட்டைக்கூட இவ்வளவு அழகா பத்தி பத்தியா பிரிச்சுப்போட முடியுமா!
    இதுக்கு ஒரு சூப்பர் ஓ.

    பின்னூட்டத்திற்கும் வருகைக்கும் நன்றி.

    ReplyDelete
  15. வாங்க வல்லி சிம்ஹன் அம்மா,

    அது அவங்களுடைய பக்குவத்தை காட்டுது. நல்லதை நாலு பேருக்கு பகிர்ந்துகொள்ளும் குணத்தைக் காட்டுது.

    வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  16. அக்கா இன்னொரு முக்கியமான விஷயத்த விட்டீங்களே டீச்சரப் பத்தி.! அவங்களுக்கு எப்பவுமே no caste or religious feelings.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது